ஆசிரியர் தேர்வு வாரியம் என்னும் இவ்வமைப்பின் நிலைத்த மற்றும் உறுதிப்பாடான நோக்கம் என்னவென்றால் தன்னாட்சியுடைய, பாரபட்சமற்ற, திறமையான, போட்டி மனப்பான்மையுடைய, தகுதியான ஆசிரிய சமுதாயத்தை உருவாக்குவதே ஆகும். மேலும் இன்று அரசு எதிர் நோக்கும் சவால்களை எதிர்கொள்ளும் வகையில், வளர்ந்து வரும் ஆசிரிய சமூகத்தின் எதிர்பார்ப்புகளுக்கு பொறுப்பேற்றுக்கொள்ளும் மாபெரும் பணியை தன்னகத்தே கொண்டுள்ளது.
ஆசிரியர் தேர்வு வாரியத்தின் முக்கிய குறிக்கோள் என்னவென்றால் நேர்மையான, வெளிப்படையான, திறமைகளுக்கு முன்னுரிமை வழங்கக்கூடிய பணிநியமனத்தை வழங்குவதே ஆகும். கல்வி அமைப்பின் தன்மையை உயர்த்துவதுடன், ஆசிரியத் தேர்வர்களின் உள்ளார்ந்த மற்றும் வெளிப்படையான திறமைகளைக் கண்டறிதலும், அவற்றை வெளிக்கொணர்தலும் மற்றும் பணிநியமன முறைகளின் மூலம் மேம்படுத்துவதும் இவ்வாரியத்தின் தலையாயப் பணியாகும்.
பணி நியமனம் முழுவதும் இலக்கமுறை மற்றும் இணையம் சார்ந்ததாகும். பணியிடங்களைக் குறித்த அறிவிப்பு முதல் தேர்வுமுடிவுகள் வெளியிடுதல் வரை அனைத்தும் மின் ஆளுமையின் பயன்பாடு. கணினி சார்ந்த தேர்வுகள்.
Copyrights © 2022 Teachers Recruitment Board. All rights reserved.